சிந்தனை

தேவையில்லா விசயங்களை நாம் சிந்தித்து கொண்டிருந்தோம் என்றால் தேவையான விசயங்களை சிந்திக்க நேரம் இருக்காது.

சவால்

சவாலைகளை எதிர்கொண்டு வெற்றி பெறும் போது உங்களின் வலிமையையும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.

தோல்வி

தோல்விக்கள் ஏற்படும் போது நாம் அடுத்தவரை குறை சொல்லும் பழக்கம் இருந்தால். வெற்றி என்பது எப்போதும் நமக்கு எட்டா கனியாகவே இருக்கும்.

திருமணம்

திருமணம் என்பது ஓர் அரண்மனை, உள்ளே போனவர்கள் வௌியேற துடிப்பார்கள். வௌியே உள்ளவர்கள் உள்ளே போக நினைப்பார்கள். இது இறைவனின் விளையாட்டு.

வெற்றி

முயற்சி கானல் நீர் அல்ல. அது வெற்றி என்கிற ஜீவ நதிக்கு அழைத்துச் செல்லும்.

அவசியம்

இச்சையும் விருப்பமும் அறிவின் எதிரிகள். திருப்தியின்மை ஏக்கம் ஆகிய இரண்டும் வளர்ச்சிக்கு அவசியமானவை.

சேவை

உன்னால் ஒருவருக்கு உதவி செய்ய முடியாது போனால் சேவை செய்வதன் மூலம் அதனை சிறிது நிவர்த்தி செய்யலாம்.

தன்னம்பிக்கை

தன்னம்பிக்கை இழந்தவன் தன்னையே இழக்கின்றான்.

விதியை வெல்ல

தாங்கி கொள்வது நம் விதியை வெல்ல சிறந்த வழியாகும்.

ஏமாற்றம்

புத்திசாலி ஒரேயொரு முறைத்தான் ஏமாற்றப்படுகின்றான்.

எதுவும் நிகழலாம்

எதுவும் நிகழலாம், பணக்காரன் கூட ஏழையின் கதவைத் தட்டலாம்.

கல்வி

கல்வியே மனிதனை செம்மைப்படுத்துகின்றது. வாழ்வது முக்கியமல்ல,சிறப்பாக வாழ்வதே முக்கியம்

உனக்குள்

உனக்குத் தேவையான எல்லா வலிமையும் உதவியும் உனக்குள் இருக்கின்றது.

வாழ்வு

நாம் உண்மையாக வாழ்வதென்பது கடமையைச் சரியாகச் செய்வதாகும்.

மனசாட்சி

ஒரு மனிதனுக்கு தெளிவான மனசாட்சி இருப்பின் அதுவே அவனுக்கு சிறந்த தூக்க மாத்திரை.

மகிழ்ச்சியாக இருங்கள்

கோபம், வருத்தம், கவலை மற்றும் மனக்கசப்பில் உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்.வாழ்க்கை மிகக்குறியது மகிழ்ச்சியாக இருங்கள்

உன்மீது நம்பிக்கை வை

உன்மீது நம்பிக்கை வை. நீங்கள் நினைப்பதை விட தைரியமாவன், உங்களை விட திறமையனவன் நீங்கள் கற்பனை செய்வதை விட அதிக திறன் கொண்டவன் என்று உன்மீது நம்பிக்கை வை.

அன்பாக இருங்கள்

கவனமாக இருங்கள். நன்றியுடன் இருங்கள். நேர்மையாக இருங்கள். உண்மையாக இருங்கள். அன்பாக இருங்கள்.

மனமும் கனவும்

உங்கள் மனதில் உள்ள அச்சத்தினால் பின்னோக்கி செல்லாதீர்கள். உங்கள் இதயத்தில் உள்ள கனவுகளால் முன்னோக்கி வழிநடத்தப்படுங்கள்.

மனது

அலை பாயும் உள்ளத்தில் உணர்ச்சி மட்டுமே இருக்கும். அங்கு நின்று நிதானித்து செயற்பட்டால் நன்மை பயக்கும்.

தொண்டு

எளியவர்களுக்கு செய்யும் தொண்டு இறைவனுக்கு செய்யும் தொண்டை விட மேலானது